இந்தியா முழுவதும் கடந்டஹ் இரண்டு ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து நேரடி வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிராவிலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதையொட்டி நடப்பாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கால அட்டவணையை மாநில கல்வி வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது.
இதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கி மார்ச் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதோபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…