Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே அலெர்ட்.. செய்முறை பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்!!

Sekar Updated:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே அலெர்ட்.. செய்முறை பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்!!Representative Image.

தமிழக பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

முன்னதாக வரும் மார்ச் 6 ஆம் தேதி முதல் 10 ந் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  பொதுத்தேர்வுகளுக்கும் செய்முறை தேர்வுகளுக்கும் இடையே நாட்கள் மிக குறைவாக உள்ளதால், செய்முறை தேர்வுகள் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

இதற்கிடையே, செய்முறைத் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதே சமயம் பொது தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சர் மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய  தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க மறுவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்