தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஜூலை 17-ல் திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளாக எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மாதம் 17 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசியத் தேர்வு முகமை அறிவித்திருந்தது.
இந்நிலையில், அதே தேதியில் பல்வேறு தேர்வுகள் நடைபெற உள்ளதால் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு தேதி தள்ளிவைக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்த நிலையில் தேசிய தேர்வு முகமை தேர்வு தேதியை தள்ளி வைக்க வில்லை என தெரிவித்துள்ளது.
மேலும், திட்டமிட்டபடி வரும் ஜூலை 17 ஆம் தேதி அறிவித்தபடி நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…