தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதியை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்புகள் குறித்து, டிஎன்பிஎஸ்சி ஆணையம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதன் படி, இந்த குரூப் 1 தேர்வின் மூலம், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு துணைப்பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர், வணிக வரித்துறை இயக்குனர், மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி உள்ளிட்ட 6 வகையான பணிகளுக்கான ஆட் சேர்ப்பு அறிவிப்புகள் வெளிவந்தது. இதன் மூலம் 92 பதவிகள் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நிர்வாகக் காரணங்களின் காரணமாக, குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் மாதம் 30, 2022 ஆம் ஆண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் 19, 2022 ஆம் நாள் அன்று முற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…