தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இன்றும் தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் தேர்வு எழுதினர். தற்போது டிஎன்பெஸ்சி தேர்வுகள் முடிந்து 6 மாதங்கள் ஆன நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடவில்லை.
அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு முறைகளில் சில மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டது. இதனால், கால தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும், டிஎன்பிஎஸ்சி ஆனது முன்னரே அறிவிக்கப்பட்ட குரூப் தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்களை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றன.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஆனது, தேர்வு முறைகளில் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திட பல்வேறு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது போல காரணங்கள் இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…