Tamilnadu News Live : 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மறுகூட்டல், விடைத்தாள் நகலை பெற நாளை முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் இந்த சான்றிதழை வைத்து மேற்படிப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதிகாரபூர்வ இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…