Madurai Latest News : தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அதன்படி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறைதீர்க்கும் முகாம் தொடங்கியது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த முதியவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து, இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அந்த முதியவரை மீட்டு காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் போலீசார் விசாரித்ததில், “கரிமேடு மோதிலால் மெயின்ரோடு, சாமியார் மடம் தெருவைச் சேர்ந்த சுப்பையா என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், “எனக்கு சொந்தமான நிலத்தை ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். நான் இது தொடர்பாக கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுப்பதற்காக இன்று காலை புறப்பட்டு வந்தேன். அப்போது மன விரக்தி காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றேன்” என தெரிவித்தார்.
இதையடுத்து அந்த முதியவரை தல்லாகுளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து தல்லாகுளம் போலீசார் முதியவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மதுரை சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாண்டி செல்வி இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இந்நிலையில் அவரிடம் நுழை வாயிலில் போலீசார் பரிசோதனை செய்த போது அவரின் பையில் மண்ணெண்ணை பாட்டில் இருந்தது எடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தனது கணவர் கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று விட்டதாக பாண்டிச்செல்வி தெரிவித்தார். இதனால் தன் கணவருடன் தன்னை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும்” என தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…