பத்திரப்பதிவு பதிய வரும் பொதுமக்கள் இணைய வழி மற்றும் ஏடிஎம் கார்டு மூலம் பதிவுத்தொகையை செலுத்தலாம். விரைவில் 3.0 எனும் பதிவுத்துறை செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் பதிவுத்துறை தலைவருக்கு புகார் அளிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள பதிவுத்துறை அலுவலகங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை இணைய வழியில் செலுத்தலாம். பத்திரப்பதிவுக்கு வருவோர் பணம் கொண்டு வரத் தேவையில்லை.
ஏடிஎம் கார்டு மூலம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவுக் கட்டணம் செலுத்தலாம். பதிவுத்துறையை மேம்படுத்த ஸ்டார் 3.0 எனும் பதிவுத்துறை செயலி விரைவில் கொண்டு வரப்படும். ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் பதிவுத்துறை அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…