Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Madurai Latest News : மதுரையில் களைகட்டிய மீன்பிடி திருவிழா..!

Muthu Kumar May 28, 2022 & 15:30 [IST]
Madurai Latest News : மதுரையில் களைகட்டிய மீன்பிடி திருவிழா..!Representative Image.

Madurai Latest News : மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு மலை மேல் கருப்பு கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் பரம்பு கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி திருவிழாவை நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மேலூர், மேலவளவு, கொட்டாம்பட்டி பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் வருகை தந்தனர்.

இந்த மீன்பிடி திருவிழாவில் அதிகாலை 6 மணி அளவில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்மாயில் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, குத்தா, வலை, கூடை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர். இந்த போட்டியில், சிறுவர் முதல் பெரியவர் வரை குடும்பம் குடும்பமாக மீன் பிடித்தனர். 

இதில், மீன் பிடித்த அனைத்து மக்களுக்குமே கெண்டை, கெளுத்தி,வீரா, கட்லா உட்பட சிறியரகத்தில் இருந்து 3 கிலோ எடை வரையிலான மீன்கள் கிடைத்தது. இந்த மீன்பிடி திருவிழா மூலம் அப்பகுதியில் விவசாயம் செழிப்பாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்