2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும் என்பதை தேசிய ஒற்றுமை நடைபயணம் மூலமாக திமுக மற்றும் காங்கிரஸ் உறுதி செய்துள்ளது.
திமுகவின் துணை பொதுசெயலாளர் மற்றும் மக்களவை எம்பியுமான கனிமொழி, திமுக சார்பாக, ராகுல் காந்தி நடத்தும் தேசிய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்று இதை இஉறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் 1980 தேர்தலில் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என கலைஞர் கருணாநிதி இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்து பிரச்சாரம் செய்த புகைப்படமும், தற்போது கனிமொழி ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் ஒன்றாக பங்கேற்றுள்ள புடைப்படமும் "அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திமுக பிரமுகர் ராம்நாட் ராஜா என்பவர் புகைப்படத்தை லேமினேட் செய்து கனிமொழிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…