Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

நேருக்கு நேர் மோதல்.. பற்றியெரிந்த கார்.. உசிலம்பட்டியில் பரபரப்பு!!

Sekar Updated:
நேருக்கு நேர் மோதல்.. பற்றியெரிந்த கார்.. உசிலம்பட்டியில் பரபரப்பு!!Representative Image.

உசிலம்பட்டி அருகே அரசு பேருந்து, இரு சக்கர வாகனம் மற்றும் கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், கார் தீப்பற்றி எறிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த நிதீஷ், தனது மனைவி மற்றும் மகளுடன் நேற்று காரில் மதுரைக்கு சென்றிருந்தார். இதையடுத்து இன்று காலை, மீண்டும் காரில் கேரளாவுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் சென்ற கார் உசிலம்பட்டி அருகே மதுரை மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக உசிலம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று எதிரே வந்தது. அப்போது திடீரென பஸ் எதிரே வந்த இருசக்கர வாகனம் மற்றும் கேரள குடும்பத்தினர் சென்ற கார் மீது மோதி விபத்திற்குள்ளானது. 

இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் கேரள குடும்பத்தினர் சென்ற கார், பஸ் மோதிய வேகத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துவிட்டது. இதனால்
அதிர்ச்சியடைந்த நிதீஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் உடனடியாக காரை விட்டு வெளியே வந்தார்.

இதையடுத்து விபத்து குறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். கார் தீப்பிடித்ததும் உடனடியாக மூவரும் வெளியே வந்ததால், அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்