திருவண்ணாமலை மாவட்டம், எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சாந்தி. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனதால், உறவினர்கள் சிகிச்சைக்கா வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சாந்தி உடலை கொண்டு வந்த ஊழியர்கள், எலந்தம்பட்டிற்கு சாலை வசதியில்லாததால், மலை அடிவாரத்திலேயே உடலை இறக்கி விட்டுச் சென்றனர்.
அங்கிருந்து அவரது உறவினர்கள் எலந்தம்பட்டு கிராமத்திற்கு உடலை மரத்தில் கட்டி(டோலி) தோளில் சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
படவேடு மலை அடிவாரத்தில் இருந்து எலந்தம்பட்டிற்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் உள்ளது. சாலை வசதியில்லாததால், கிராம மக்கள் நடந்தே மலை அடிவாரத்திற்கு வந்து பின்னர் வாகனங்கள் மூலம் டவுன் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆகையால் விரைந்து சாலை வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் பாம்பு கடித்த குழந்தை சாலை வசதியில்லாததால், நடந்தே கொண்டு சென்ற போது, பாதி வழியில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…