வேலூர்: காட்பாடி அருகே தாய் இறந்த சோகத்தில் மகனும் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அருகே டி .ஆர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 45). தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இவரது தாய் கோசாலை (வயது 80), கடந்த ஒரு மாத காலமாக உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்த நிலையில் நேற்று மாலை அவர் காலமானார்.
தாயின் திடீர் இறப்பு குறித்து உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்த கார்த்திக், சோகத்தில் உறைந்து மனவேதனையுடன் காணப்பட்டார். நேற்றிரவு முழுவதும சோகத்துடனே காணப்பட்ட கார்த்திக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தாய் இறந்த துக்கத்தில் இருந்த மகனும் அடுத்த நாளே உயிரை விட்ட சம்பவம் டி.ஆர்.குப்பம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…