மதுரை: தமிழகத்தின் ஜவுளி சாம்ராஜ்யமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறது சரவணா ஸ்டோர்ஸ். அப்படி இருக்கையில் நேற்று திடீரென சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9 ஆம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே சுமார் 5 ஏக்கர் பரபரவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது சரவணா ஸ்டோர்ஸ். தங்கம், ஜவுளி, வீட்டு வசதி பொருட்கள், தினசரி மளிகை என்று அனைத்தும் ஒவ்வொரு தளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9வது தளத்தில் உணவகம் நடைபெற்று வந்த இடத்தில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக கடையில் இருந்து வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டதாக காவல் துறையில் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். எதனால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இருப்பினும் பாதுகாப்பு கருதி பொது மக்கள் யாரையும் கடைக்கு அனுமதி அளிக்கவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…