ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடு முட்டியதில் மாடு பிடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் திருவிழாவையொட்டி, மதுரையில் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, இன்று நடந்து வருகிறது. காலை முதலே ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காளைகளை அடக்குவதில் காளையர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
அந்த வகையில் மாடுபிடி வீரரான பாலமேட்டைச் சேர்ந்த அரவிந்த் ராஜ் என்பவர், சிறப்பாக போட்டிபோட்டு காளைகளை அடக்கி வந்தார். அவர் ஒரு கட்டத்தில் 9 காளைகளை தழுவி, அதிக காளைகளை தழுவியதில் 3ஆம் இடத்திலிருந்தார்.
இந்நிலையில், ஒரு காளையை தழுவ முயற்சித்தபோது, எதிர்பாராதவிதமாக காளை குத்தியதில் அரவிந்த் ராஜின் வலது பக்க வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், அரவிந்த் ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழந்த சம்பவம் பாலமேடு ஜல்லிக்கட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…