Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பசியில் பார்சலை பிரித்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - உணவகத்தில் அதிரடி சோதனை!

Baskaran Updated:
பசியில் பார்சலை பிரித்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - உணவகத்தில் அதிரடி சோதனை!Representative Image.

மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பாடு பார்சல் ஒன்றை வாங்கி சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டில் சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்த போது வெள்ளை சாதத்தில் பாதி உடைந்த பிளேடு துண்டு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று கடையில் வேலை பார்த்த ஊழியர் ஞானம் என்பவரிடம் கேட்ட போது அவர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முகமது உணவுப்பாதுகாப்புத்துறைக்கு கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த உணவை சோதனை செய்ததோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படாமல் இருந்துள்ளது.  மேலும் பணியாளர்களிடம் மருத்துவசான்று, தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக்கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்துள்ளது.

மேலும் உணவுப்பாதுகாப்புத்துறை சுட்டிக்காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மதுரையில் மதிய உணவிற்கு ஆர்டர் செய்த உணவில் பிளேடு துண்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்