Madurai Latest News : மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்த தயாரிப்பு அறிக்கையை பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், மதுரையில் தோப்பூர் எய்ம்ஸ் கல்லூரியிலிருந்து ஒத்தக்கடை வேளாண் கல்லூரி வரை 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த 35 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் சேவை மதுரையின் முக்கிய பகுதிகளான மதுரை பெரியார் பேருந்து நிலையம், மதுரை உயர்நீதிமன்ற கிளை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகள் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் மெட்ரோ ரயில் சேவைக்கான ஒப்புதல் மற்றும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…