Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

அதிர்ச்சி.. ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை உயிரிழப்பு!!

Nandhinipriya Ganeshan October 14, 2022 & 09:58 [IST]
அதிர்ச்சி.. ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை உயிரிழப்பு!!Representative Image.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சத்யா என்ற இளம்பெண் கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.  அப்போது சத்யாவை  ஒருதலையாக காதலித்த சதீஷ் என்ற இளைஞர் அவரை பின்தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து சத்யாவை தன்னை காதலிக்குமாறு அவர் வற்புறுத்தியுள்ளார்.  

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் சத்யாவை மின்சார ரயில் வந்து கொண்டிருந்தபோது தள்ளிவிட்டுள்ளார். இதில் சத்யா தலை நசங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சத்யாவின் உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுவாதி, சுவேதா, சத்யா: சென்னை ரயில் நிலையங்களில் தொடரும் கொலைச்சம்பவங்கள்.. குற்றமும் பின்னணியும்..

இந்த கொடூர சம்பவம் சென்னை மக்கள் மத்தியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, கொலைக்கு காரணமான இளைஞரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி, கைது செய்துள்ளனர்.  இந்த நிலையில் மகள் சத்யா கொடூரமாக கொல்லப்பட்ட சோகத்தில் இருந்த அவரது தந்தை மாணிக்கம் மதுவில் விஷம் கலந்து குடித்தது இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்