மதுரை: திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக அரசு தேர்தல் நேரத்தில் திமுக தலைவரான மு.க ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால், மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தற்பொழுது அரசு மதுபான கடைகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, தனியார் மதுபான கடைகளில் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் மது பழக்கங்களுக்கு ஆளாககூடிய இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான மதுபான கடைகளை மூட வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…