Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மதுரையில் போதை மாத்திரை.. பள்ளி மாணவர்களால் பரபரப்பு..!

Muthu Kumar August 05, 2022 & 15:30 [IST]
மதுரையில் போதை மாத்திரை.. பள்ளி மாணவர்களால் பரபரப்பு..!Representative Image.

மதுரையில் பள்ளி மாணவர்கள் நரம்புத்தளர்ச்சி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும், காமராஜர் சாலையில் உள்ள மருந்து கடை ஒன்று இந்த மாத்திரைகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தகவலறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாணவர்களுக்கு மாத்திரை வினியோகம் செய்த மருந்துக்கடை உரிமையாளர் தங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

மேலும், சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனருக்கு காவல்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர். இதனையடுத்து அந்த மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும், இச்சம்பவக்ம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்