ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு நாளை முதல் ஜனவரி 17-ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை முதல் நடைபெற உள்ளது.
அதன்படி, மதுரையில் பாலமேட்டில் நாளையும், அவனியாபுரத்தில் நாளை மறுநாளும், அலங்காநல்லூரில் 17 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இதை முன்னிட்டு, இந்த மூன்று பகுதிகளிலும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…