Madurai Flash News Today : கோடை விடுமுறையில் மதுரையில் உள்ள மீனாட்சிஅம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை முருகன் கோவில், அழகர்கோவில் உள்ளிட்ட கோவில்கள் மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களை காண தமிழக முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.
ரயில்வசதி
கோடை விடுமுறையை கழிக்க வரும் சுற்றுலா பயணிகள் ரெயில்வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை முன்னிட்டு மதுரை வரும் சிலரெயில்கள் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்காததால் இந்த நிலைமை நீடிக்கிறது. இது குறித்து பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சுற்றுலா பயணிகளின் கோரிக்கை
மதுரை வரும் சுற்றுலா பயணிகள் ராமேசுவரம், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயியிலில் உடனே முன்பதிவில்லாத பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிக்கல்
குடும்பத்துடன் பஸ்களில் பயணம் செய்தால் அதிக செலவாகும் என்பதால் ராமேசுவரம் செல்ல முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். சுற்றுலா பயணிகள் நலன் கருதி மதுரையில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் உடனே இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…