மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது.
வெளிநாட்டிலிருந்து செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜி.ஆர்.நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை பிவெட்டி விட்டு தப்பினர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவிக்கும், சிவகங்கையை உறவினர் வெங்கடேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.
வெங்கடேசன் முலம் கூலிப்படையை ஏவி செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதற்காக வைஷ்ணவி தன்னுடன் நகையை அடக்க வைத்து ஒரு லட்சம் ரூபாய் வெங்கடேசனுக்கு கொடுத்துள்ளார் இதனையடுத்து வைஷ்ணவி, அவரது கள்ளக்காதலன் வெங்கடேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…