ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 169 வது படமாக ஜெய்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனது மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படி அடுத்தடுத்து படங்களைக் கைவசம் வைத்திருக்கும் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, சிபி சக்ரவர்த்தி ஆகிய இயக்குநர்களுடன் இணைய காத்திருக்கிறார்.
இதில் அதிர்ஷ்டம் சிபி சக்ரவர்த்திக்கு தான் என முதலில் செய்தி வந்தது. அதாவது ரஜினியின் அடுத்த படத்தை அவர்தான் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. பூஜைக்கெல்லாம் தயார் செய்துவிட்ட நிலையில், ஜனவரியில் பூஜை போடவும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சிபி சக்ரவர்த்தியின் கதையில் சில மாற்றங்கள் செய்ய சொல்லியிருக்கிறாராம் ரஜினிகாந்த். அதுமட்டுமின்றி அந்த படத்தின் கதை ரஜினியை ஈர்த்தாலும் இப்போது அது சரியாக இருக்காது, இரண்டு படங்களுக்கு பிறகு அதை தொடரலாம் அதற்குள் வேறொரு படத்தை இயக்கிவிட்டு வாருங்கள் என சிபிக்கு சொல்லி அனுப்பியிருக்கிறாராம் ரஜினி.
லைகா தயாரிப்பில் விஜய் நடிக்க சிபி சக்ரவர்த்தி கதை நிகழ வாய்ப்பிருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
லால் சலாம் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் வித்தியாசமான திரைக்கதையில் புதிய படம் ஒன்றை மூன்று மாதத்துக்குள் முடித்து விடலாம் அதனைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி படத்துக்கு 6 மாதங்கள் வரை கால்ஷீட் கொடுக்கலாம் என்றும், சிபி சக்ரவர்த்தி கதையை எப்படி திருத்தியிருக்கிறார் என்பதை பொறுத்து அவருக்கு வாய்ப்பு வழங்கலாமா என்பதை அறிவிக்கலாம் என்கிறார்கள் ரஜினி தரப்பினர்.
இவை எதுவுமே ரஜினிகாந்திடமிருந்து வெளியே வந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்பதால், பொறுத்திருந்து பார்க்கலாம் யாருக்கு லக் அடிக்கப்போகிறது என்பதை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…