ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்கு நண்பரின் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் சென்று சாப்பிட்டு வந்த ரஜினியை அவமானப் படுத்தி வெளியில் அனுப்பியுள்ளார் அந்த ஹோட்டலின் மேலாளர். இதனால் ரஜினி மிகவும் வேதனையடைந்து வெளியேறியதாக பிரபல இணைய இதழில் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்பது குறித்து உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவலும் இல்லை. ஆனால் இதுகுறித்து சிலர் பேசியிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் ஆரம்ப கால கட்டத்தில் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு சினிமா விசயமாக அடிக்கடி வந்து செல்வது வழக்கமாம். அப்போதெல்லாம் குறிப்பிட்ட ஸ்டார் ஹோட்டலில் வந்து சாப்பிட்டு செல்வாராம். அங்கு பணிபுரியும் தன்னுடைய நண்பரின் உதவியுடன் அங்கு சாப்பிட்டும் வந்திருக்கிறார்.
ஒருமுறை அதே ஹோட்டலில் பணிபுரியும் மேலாளர் ரஜினியை அவமானப்படுத்திவிட்டாராம். அதனால் வருத்தத்துடன் வெளியேறிவிட்டார் ரஜினிகாந்த். இதன்பிறகு அந்த ஹோட்டலில் தன்னுடைய திருமண வரவேற்பை வைத்து பழிதீர்த்துக் கொண்டார் என முடிகிறது இந்த கட்டுரை.
முதலில் ரஜினி சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே கண்டக்டராக பணிபுரிந்தவர் என்றாலும் அவர் உண்மையில் திரைப்பட கல்லூரி மாணவர். பெரிய வசதி இல்லை என்றாலும் பணமே இல்லாதவரல்லர். அப்படியே பணம் இல்லாத சமயத்திலும் இதுபோன்ற பெரிய ஹோட்டலுக்கு சென்று திருட்டத்தனமாக சாப்பிட்டிருப்பாரா என்பது ஏற்றுக் கொள்ள முடியாத கூற்று.
சரி அப்படியே நடந்திருக்கிறது என்று கூட வைப்போமே.. தான் அவமானப்பட்டால், பிறகு வசதி வந்தவுடன் அந்த குறிப்பிட்ட மேனேஜரை அழைத்து அவருக்கு உதவிகள் செய்து நாணச் செய்திருந்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட ஹோட்டலின் உரிமையாளர் வேறொருவர் தானே. அங்கு தனது திருமண வரவேற்பை வைத்து கொண்டாடியது எப்படி பதிலடி ஆகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…