வணங்கான் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்க இருந்த இன்னொரு படமும் டிராப் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்கவிருந்த இயக்குநர் வேறொரு கதையைக் கூறி சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.
சூர்யா புதுப் புது இயக்குநர்களிடம் கதை கேட்பதும் ஆனால் அப்போதைக்கு அது நடக்காமல் போவது, அந்த குறிப்பிட்ட இயக்குநர்கள் வேறு நடிகர்களைத் தேடிச் சென்று ஹிட் கொடுத்துவிடுவார்கள்.
மாநகரம் படத்தை எடுத்திருந்த லோகேஷ் கனகராஜ் அடுத்து சென்றது சூர்யாவிடம்தான். ஆனால் அப்போது லோகேஷை வைத்து அந்த கதையை செய்யமுடியுமா என சந்தேகம் எழுந்த நிலையில், சூர்யா படத்தை நிறுத்தி வைத்துவிட்டு கார்த்திக்கு கதை எழுதினார் லோகேஷ் கனகராஜ்.
சதுரங்க வேட்டை படத்தைத் தொடர்ந்து சூர்யாவுக்கு சூப்பரான கதை ஒன்றை வைத்திருந்தாராம் அ.வினோத். ஆனால் அந்த நேரத்தில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சூர்யா, அ. வினோத்தை கார்த்திக்கு கதை எழுத கேட்டுக் கொண்டதால், பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு தீரன் கதையை எழுதிக் கொடுத்துள்ளார்.
இதேபோல்தான் இப்போது இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமாரிடம் கதை கேட்டிருந்தார் சூர்யா. ஆனால் இப்போதைக்கு அந்த படத்தை பண்ண முடியாது என முடிவெடுத்துவிட்டதால் வேறொரு கதையை சிவகார்த்திகேயன் நிறுவனத்துக்கு செய்யலாம் என முடிவெடுத்துள்ளாராம். அதில் சிவகார்த்திகேயனே கதாநாயகனாக நடிப்பார் என கூறப்படுகிறது. இதுதவிர கார்த்திக்கும் ஒரு கதை வைத்திருக்கிறாராம் ரவிக்குமார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…