Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

பழியைத் தூக்கி பொன்னியின் செல்வன் மீது போட்ட ஜெயம் ரவி!

UDHAYA KUMAR Updated:
பழியைத் தூக்கி பொன்னியின் செல்வன் மீது போட்ட ஜெயம் ரவி!Representative Image.

தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருப்பதாக 4 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்னும் துவங்கியபாடில்லை. இந்த படத்துக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் காத்திருக்கிறது. ஜெயம் ரவியும் அரவிந்த் சாமியும் இணைந்து கலக்கிய அந்த படத்தின் அடுத்த பாகம் எப்படி துவங்கும் அதன் கதை எப்படி இருக்கும் என பலரும் பல விதமாக பேசி பேசி இப்போது டயர்டாகிவிட்டார்கள்.

 

கடந்த சில மாதங்களாக பிஸியாக இருந்த ஜெயம்ரவியை தேடி பிடித்து நேர்காணல் செய்துவிட்டது பிரபல யூடியூப் சேனல் ஒன்று. அதில் அதிரடியாக கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு ஜெயம் ரவி பதிலளித்தார். அதில் பல கேள்விகள் மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. பலரும் எதிர்பார்த்த தனி ஒருவன் 2 படம் குறித்த கேள்வியும் அதில் இருந்தது. 

 

மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் தனி ஒருவன்.  ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, தம்பிராமையா, நயன்தாரா என பலரும் நடித்திருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கடந்த 2018ம் ஆண்டே பேச்சு எழத்துவங்கியது. 

 

தெலுங்கு, பெங்கால் மொழிகளில் படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல பெயரைப் பெற்றதும் இந்த பார்ட் 2 படத்தை எப்படியாவது பண்ண வேண்டும் என கதை தேடி பிடித்தார் மோகன் ராஜா. அந்த நேரத்தில்தான் அண்ணன் தம்பி இருவரும் படங்களில் பிஸியாகியுள்ளனர். 

 

மோகன் ராஜாவுக்கு தெலுங்கு மார்க்கெட்டில் மிகப் பெரிய வரவேற்பு ஏற்பட, சிரஞ்சீவியே அவரை அழைத்து காட்ஃபாதர் படத்தின் தெலுங்கு வெர்சனை இயக்க கேட்டுக் கொண்டார். இதனால் தட்டமுடியாமல் அந்த படத்தை ஒருமனதாக பண்ணி கொடுத்தார் ராஜா. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்தார். 

 

பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து அகிலன், இறைவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் ஜெயம்ரவி. இந்த வருடம் பொன்னியின் செல்வன் 2 உட்பட மொத்தம் 3 படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. 

 

இந்த வருட பாதியில் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய ஜெயம்ரவியும் விரைவில் துவங்க இருக்கிறோம் என கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்