தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுள் ஒருவர் நடிகர் அஜித். எந்த திரைப்படமாக இருந்தாலும் அதில் கதை முக்கியமில்லை தான் வந்தாலே ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள் எனும் அளவுக்கு ரசிகர்கள் படை பலத்துடன் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவிலும் வலம் வருகிறார் அஜித்.
சினிமா ஷூட்டிங் நாட்களில் விமான நிலையங்களிலோ வேறு இடங்களிலோ ரசிகர்களைப் பார்த்தால் அலட்சியப்படுத்தாமல், அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வார் அவர். ரசிகர்களின் வேண்டுகோள்களை மறுத்தாலும் அதை அவ்வளவு அன்பாய் சொல்வார். மற்ற நடிகர்கள் போல இவர் பொது இடங்களில் கோபப்பட்டு பார்த்திருக்க முடியாது.
பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட மற்ற கலைகளிலும் சிறந்து விளங்குபவர். ரசிகர்களை பெரிய அளவில் சந்திப்பதே இல்லை என்பது குற்றச்சாட்டு. ஆனால் திருச்சியில் அதனையும் மறுத்துவிட்டு, நேரடியாக ரசிகர்களைச் சந்தித்தார்.
இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அஜித் ரசிகர்கள் சிலரைச் சந்தித்திருப்பதாக தகவலும் உடன் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனை டிவிட்டர் டிராக்கர்ஸ் சொல்லி வைத்தார் போல அனைவரும் ஷேர் செய்து வருகின்றனர்.
எதேச்சையாக நடந்த இந்த ரசிகர்கள் சந்திப்பில் ரசிகர்கள் விருப்பத்தின் பேரில் பல நிகழ்ச்சிகளுக்கு செல்லவேண்டிய அஜித் கொஞ்சம் பொறுமை காத்து நின்று புகைப்படம் எடுத்தது பாராட்டுக்குரியது என இணையத்தில் பேசி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…