லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யாவும் கார்த்தியும் இணைய வேண்டியதுதானாம். அதுவும் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன அய்யப்பனும் கோஷியும் படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பாக அமைந்ததாம். எஸ் ஆர் பிரபு, லோகேஷ் கனகராஜ், சூர்யா, கார்த்தி என அனைவரும் ஆர்வம் காட்டியும் இந்த படம் நிறைவேறவில்லை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ், இந்த படத்தைப் பார்த்துவிட்டு எஸ் ஆர் பிரபுவிடம் கேட்க, அவரும் ஓகே சொல்ல அடுத்தடுத்து சூர்யா, கார்த்தி இருவரையும் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால் இந்த கதையின் தமிழ் ரீமேக் உரிமையை வேறொருவர் வாங்கிவிட்டதால் இந்த படம் நிறைவேறாமல் போயிவிட்டது. இதனால் தமிழ் ரசிகர்கள்தான் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…