தமிழகத்தைப் பொறுத்த வரையில் எப்படி திரைப்படங்களுக்கு ஆர்வம் அதிகமாகக் காணப்படுகிறதோ, அதே போலவே சின்னத்திரை அதாவது சீரியல்களுக்கு என்று அதிக ஈர்ப்பு மக்களிடையே உள்ளது. அதிலும் சன் டிவி சீரியல் என்றால் அதற்கு சிறியவர் முதல் பெரியவர் வரை தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது தற்போது மக்கள் அதிகம் ரசிக்கும் "எதிர்நீச்சல்" சீரியல் தான். பெண்களின் திருமண வாழ்க்கை மற்றும் அன்றாட நிகழ்வுகளை மிகவும் தத்ரூபமாக காண்பிக்கும் இந்த சீரியல் எப்போதுமே டிஆர்பி-யில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அப்படியாக இந்த சீரியலில் அடுத்த என்ன நடக்கப்போகும் என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தன்னுடைய ஒரகத்திகளின் புதைந்து போன கனவுகளை மீட்டெடுக்கும் பயணத்தில் அப்பத்தா உடன் ஜனனியும் பல தடைகளை சந்தித்து வருகிறார். பொங்கல் பண்டிகையின் போது அப்பத்தாவைத் தீர்த்துக் கட்ட முடிவெடுக்கும் குணசேகரன் கதிரைப் பயன்படுத்தி காயை நகர்த்துகிறான். ஆனால் அதில் ஜனனி சிக்கிக்கொள்கிறாள். அதில் இருந்து மீண்டு திரும்பி வரும் அப்பத்தா ஜனனி ஆதிரையின் திருமண விஷயத்தில் அவளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
இருப்பினும் தன்னுடைய வெட்டி கௌரவத்திர்காகவும் சுயநலத்திற்காகவும் ஆதிரையை கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துவிட்டார் குணசேகரன். ஆனால் ஜனனி, அப்பத்தா மற்றும் வீட்டுப் பெண்கள் அனைவரும் ஆதிரை பக்கம் நிற்கின்றனர். இதில் குணசேகரன் நினைத்தது நடக்குமா அல்லது ஜனனி அப்பத்தா நினைத்தது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பாப்போம். நேற்று ஆதிரை குணசேகரன் மற்றும் ஞானத்தின் காலில் விழுந்து அழுது கெஞ்சுகிறாள். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் இருவரின் திருமணத்திற்காக ஜாதகத்தை பார்க்க செல்கிறான்.
பிறகு ஜனனி மற்றும் சக்தி இந்த பிரச்சனைக்கு முடிவு செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இதனை வைத்தே ஜனனி சக்தியை சேர்த்து வைக்க முடிவு செய்கின்றனர் ஓரகத்திகள். ஆனால் இதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த கதிர் மற்றும் குணசேகரன் எஸ்.கே.ஆரை சந்தித்து புது பிரச்சனையை கிளப்புகின்றனர். இதனின் முடிவில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடைபெறப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…