நல்ல நல்ல சீன்லாம் கட்.. பாபா நிச்சயம் தோல்வியைத் தான் சந்திக்கும் என ரசிகர்கள் வருத்ததைத் தெரிவித்துவிட்டு செல்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பாபா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து பார்க்க ஆவலாக இருக்கின்றனர்.
மாண்டஸ் புயலின் காரணமாக அதிக அளவில் மழை பெய்து வருவதால் படம் பாதிக்கும் என கூறப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆங்காங்கே திரையரங்குக்குள் நுழைவதை காண முடிகிறது.
மிகவும் ஆர்வத்துடன் வந்திருந்த ரசிகர்களுக்கு பாபா நிச்சயம் பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டு வரும். 20 வருடங்களுக்கு முன்னர் அவர்களது 35, 40வது வயதுகளில் தியேட்டர்களில் ஆரவாரம் செய்தது, கொண்டாடியது என அனைத்தையும் நினைவுக்கு கொண்டு வரும். அதே நேரம் இந்த கால இளைஞர்கள் சிலரும் ஆர்வக்கோளாறில் முதல் காட்சி காண வந்திருக்கின்றனர்.
20 வருடங்களுக்குப் பிறகும் பாபா திரைப்படம் பார்க்க நன்றாக இருக்கிறது. நல்ல ஃபிரஷ்ஷான லுக்கில் இருக்கிறது. படத்தில் கதை இல்லை என்றாலும் ரஜினிக்காகவும், பாபாவுக்காகவும் பார்க்க ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.ஆனாலும் யாரையும் படம் திருப்திப்படுத்தவில்லை என்பது வருத்தமான விசயம்தான்.
படம் நன்றாக பேசப்பட வேண்டும் என கிளைமேக்ஸ் காட்சியில் மாற்றம் இருக்கும் என கூறி ரசிகர்களை திசை திருப்பியுள்ளனர் என்கிறார்கள். படத்தின் கிளைமேக்ஸ் உட்பட எந்த சீனிலும் மாற்றம் இல்லையாம். ஆனால் பல நல்ல சீன்கள் கட் பண்ணி படத்தை கெடுத்துவிட்டார்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…