கடந்த 2015ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் புலி. இந்த படத்துக்காக வாங்கிய சம்பளத்தில் விஜய் 15 கோடி ரூபாயை வருமானத்தில் காட்டாததாக கூறி அவர் மீது புகார் தெரிவித்து 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தனர்.
7 ஆண்டுகளாக நிலுவையிலிருந்து வந்த நிலையில், இதுகுறித்து விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் அந்த அபதாரத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகள் கலந்தாசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த வழக்கில் விஜய் பக்கம் தீர்ப்பு வரும் என கூறப்படுகிறது.
விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்க, இயக்குநர் வம்சி கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதுடன் இயக்கியும் வருகிறார். இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜூடன் அடுத்த படத்தில் இணையவுள்ளார் விஜய். இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…