Cine News : தமிழ் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமான மறைந்த விஜே சித்ராவின் கணவர் மீது மீண்டும் புகார்.
விஜே சித்ரா
தமிழ் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விஜே சித்ரா தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் இவர் ஹேமந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான 3 மாதத்தில் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஹேமந்த் கைது
விஜே சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
புதிய திருப்பம்
இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த ஹேமந்த் போலீசில் புகார் மமனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ”தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது சித்ராவின் கொலைக்கு நான் காரணமில்லை அரசியல் கும்பல் ஒன்று அதற்குப் பின்னால் இருக்கிறது” என கூறியிருந்தார். மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Chinnathirai Chitra Death News:பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா மரணத்தில் முன்னால் அமைச்சர் சித்ராவின் கணவர் அறிக்கை!
ஹேமந்த் மீது புகார்
இந்நிலையில் சித்துவின் தோழியான ரேகா நாயர், ஹேமந்த் பல பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி உள்ளார். மேலும் அவரால் கர்ப்பமாக்கி கைவிடப்பட்டு பிறகு அபார்ஷன் செய்த பல பெண்கள் என்னிடம் வருத்தப்பட்டுள்ளார்கள் என கூறியுள்ளார்.
ஆடை இல்லாமல் போட்டோ
மேலும், பல திருமணமான பெண்களிடம் ஹேமந்த், ”ஆடை இல்லாமல் போட்டோ அனுப்பு” என கேட்டுள்ளார். மேலும் ”இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன தேவைப்பட்டால் அவைகளை கோர்ட்டில் சமர்ப்பிக்கவும் நான் தயாராக உள்ளேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…