பதான் படத்தில் சில சர்ச்சையான காட்சிகள் இருப்பது இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என கூறி சில ரௌடிகள் கலவரம் செய்தனர். உள்ளூர் காவல்துறையால் அந்த கலவரம் அடக்கப்பட்டது. மேலும் இந்து அமைப்புகள் சிலவும் இந்த எதிர்ப்பை செய்தது. இதனால் நாடு முழுவதும் பரபரப்பானது பதான் படம்.
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படம் நாளை ஜனவரி 25ம் தேதி ரிலீசாக காத்திருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் சில காட்சிகளை டீசரில் பார்த்துவிட்டு பெரும் கலவரத்தை உண்டாக்க சில அமைப்புகள் திட்டமிட்டன எனும் தகவல் இணையதளத்தில் கசிந்தது.
இந்து மதத்தின் காவலர்கள் என்று தங்களையே கூறிக்கொண்ட சில அமைப்புகளும் பாடல் காட்சியில் ஆபாசம் இருப்பதாக கூறி அது இந்து மக்களின் உணர்வை பாதிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சினிமாவில் காட்டப்படும் விசயங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் மாற்று மதத்தினர், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் இதுபோன்று பாதிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
இந்த படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என அவர்கள் கூறியதும், தணிக்கைத் துறையிலிருந்தே குறிப்பிட்ட சர்ச்சைக் காட்சியை நீக்கிவிட்டனர். மீண்டும் தணிக்கை செய்து படத்தை வெளியிடுகிறது படக்குழு. நாளை ரிலீசாகவுள்ள நிலையில், ஷாருக்கான் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரது வீட்டு முன் திரண்டனர்.
ஷாருக் பெயரைக் கூறி கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், ஷாருக்கான் வெளியே வந்து அனைவருடனும் கையசைத்து பேசினார். புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது பட வெளியீட்டுக்கான ஸ்டண்ட் என்றும் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…