நெல்சன் திலீப்குமாருடன் ரஜினி இணையும் புதிய படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு சிகை அலங்காரம் செய்ய ஹாலிவுட்டிலிருந்து ஒப்பனை கலைஞர் படை வரவழைக்கப்பட்டிருக்கிறதாம். ஆலிம் ஹக்கிமின் டீம் இந்த வேலையை இப்போது தொடங்கவிருக்கிறதாம். ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஷூட்டிங் துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆன்மீக விழா ஒன்றில் பேசியவை சர்ச்சைகளை உண்டாக்கியது. சாதி பற்றியும், நிம்மதி இல்லை என்பது பற்றியும் அவர் பேசியதை இணைய வாசிகள் பலரும் கேலி செய்து மீம் உருவாக்கி பகிர்ந்தனர். காரணம் அவர் சாதி பற்றிய மிகவும் பழைமையான கருத்துக்களை போற போக்கில் அடிச்சி விட்டார். கோடி கோடியாய் சம்பளம் வாங்கிக்கொண்டு பணம் சம்பாதிப்பதில் நிம்மதி இல்லை எனக் கூறினார். இது ரசிகர்களை உசுப்பி விட்டது. நீங்கள் கோடிக்கணக்கில் பணம் சேர்த்துவிட்டு எங்களைப் பார்த்து பணம் நிம்மதியைத் தராது என்கிறீர்களே. நாங்களும் சம்பாதித்து விட்டு பார்க்கிறோம் நிம்மதியைத் தருகிறதா இல்லையா என கோபமடைந்து பதிவிட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…