இளையராஜா தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மொழி மக்களும் கனெக்ட் செய்துகொள்ளும் ஒரு பெயர். இசையின் உருவம். ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா அதில் பல பாடல்களைச் சொந்த குரலிலேயே பாடியிருக்கிறார்.
தனது சொந்த குரலில் பாடிய பாடல்களை தன் ஸ்டைலில் பாடி அதை ஹிட் ஆக்குவதென்பது இளையராஜாவுக்கு கைவந்த கலை.
விளக்கு வச்ச நேரத்திலே என்ற ஒரு பாடலில் இப்படி வரிகள் எழுதியிருக்கிறார் காமராசன்.
விளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பாக்கையிலே தாகம் என்றான்
நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற என எழுதிக் கொண்டு இளையராஜாவிடம் கொண்டு சென்றிக்கிறது படக்குழு.
இயக்குநர் பாக்யராஜ் சொல்ல இளையராஜா பாடல் வரிகளை வாங்கிப் படித்துவிட்டு தான் மாலை போட்டிருப்பதால் இதை என்னால் பாட முடியாது என மறுத்திருக்கிறார்.
சுவாரஸ்யமாக தனது சாமர்த்தியத்தால் பேசி இளையராஜாவை பாட சம்மதிக்க வைத்துவிட்டாராம் பாக்யராஜ். இதில் சென்சார் பிரச்னை வரும் எனவும் இளையராஜா அறிவுறுத்தியிருக்கிறார்.
பாடத் துவங்குகையில், சரியாக பாடல் வரிகளை உள்வாங்காத இளையராஜா,
வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா..
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா..
இப்படி பாட, பாக்யராஜ் இதுவே போதும் என்றிருக்கிறார். ஆனால் இது எப்படி சரியாகும் நான் பாடித் தரேன் என்று இளையராஜா சொன்னதும் வேண்டாம் என்று பாக்யராஜ் மறுத்துவிட்டாராம். இதற்கு பாக்யராஜ் சொன்ன காரணம்தான் ஹைலைட்.
முழுவதும் பாடி சென்சாருக்கு அனுப்பி கட் செய்யப் போறாங்க..அதுக்கு இப்படி பாடி தனதானனனந போட்டு எடுத்தால் அதுலயே ஒரு கிக் இருக்குது என்று அதை அப்படியே படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…