பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது லைகா.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுக்க மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. 500 கோடி அளவுக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் சுமார் 130 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் சாதனை செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை சற்று முன்னர் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது லைகா பட நிறுவனம். அதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் தோன்றும் காட்சிகளையும் இணைத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…