இந்த விசயத்துக்காகத்தான் லோகேஷைத் தனக்கு பிடிக்கும் என மனம் திறந்து பாராட்டியுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.
கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகராக இருந்து அவரையே இயக்கிப் பெருமை இருவருக்கு உண்டு. ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றொருவர் லோகேஷ் கனகராஜ். ஆனால் கௌதம் செய்யாததை லோகேஷ் வேற லெவலுக்கு இறங்கி செய்துவிட்டார். கமல்ஹாசனுக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பெரும் பெயரையும் பணத்தையும் சம்பாதித்து கொடுத்து விட்டார்.
விக்ரம் திரைப்படத்தின் வெற்றி கோலிவுட்டின் மீது உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில், சில நாட்கள் முன்னதாக ரவுண்ட் டேபிள் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் லோகேஷும் உடன் இருந்தார். பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி, கௌதம் மேனன், சீதாராமம் தயாரிப்பாளர், நடிகர் இயக்குநர் பிரித்விராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.
விக்ரம் படத்தின் கதையை எப்படி லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார் என்பது குறித்து கமல்ஹாசன் பேசினார். தன்னிடம் ஒரு கதை இருந்தது. அது ஜஸ்ட் ஒன் லைன் தான். தான் வைத்திருந்த அத்தனை கதைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு என்னிடம் இருந்த ஒன்லைனை அப்படியே ஸ்க்ரிப்ட்டாக மாற்றி படமாகக் கொடுத்துவிட்டார். இந்த ஃபயர்தான் , புதிய யோசனைகளை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கும் இந்த தன்மைதான் லோகேஷிடம் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…