ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியாக கிட்டத்தட்ட 1 வருட காலம் காத்திருக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரஜினிகாந்த் எப்படியாவது ஹிட் கொடுக்கவேண்டும் என அடுத்தடுத்து கதை கேட்டு வந்தார். அவரது பாணியான கமர்சியல் கதையில் நடிக்கலாம் என அடுத்தடுத்து கேட்ட கதைகளில் ஓகே ஆனது நெல்சன் சொன்ன கதைதான்.
விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியிருந்த நெல்சன், அந்த படத்தை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வைக்கவில்லை என்பதால் அவரை ரசிகர்கள் பலரும் ட்ரால் செய்து கழுவி ஊற்றினர். இதில் அவரது பங்கு பெரிய அளவில் இருந்தாலும் படம் தோல்விக்கு அவர் மட்டுமே காரணம் இல்லை. பட தயாரிப்பு நிறுவனத்தின் இடையூறும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அதே கம்பெனிக்கு இருவரும் படம் செய்கின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படம் எப்போது ரிலீசாகும் என இப்போதே ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்த தகவலும் இப்போது வெளிவந்துள்ளது
ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம்தான் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படம் ஆகஸ்ட் தொடங்கி, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் என நான்கு மாதங்கள் நடைபெறும் எனவும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறும். அப்படியென்றாலும் மார்ச் மாதத்துக்குள் படத்தை ரிலீஸ் செய்துவிடலாம்தான். ஆனால் படம் அடுத்த மே அல்லது ஜூன் மாதம்தான் திரைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…