Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்ரமுடன் கமல்ஹாசன்! மீண்டும் தொடங்கவுள்ளது தேவர்மகன் 2....! இவர்தான் இயக்குநர்!

UDHAYA KUMAR June 11, 2022 & 16:02 [IST]
விக்ரமுடன் கமல்ஹாசன்! மீண்டும் தொடங்கவுள்ளது தேவர்மகன் 2....! இவர்தான் இயக்குநர்!Representative Image.

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களிலேயே சமீப காலமாக மிகப் பெரிய அளவில் வியாபாரம் ஆன படம் விக்ரம்தான். இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் ஒர்க்கை லோகேஷ் கனகராஜ் எழுதிக் கொண்டிருந்த வேளையில், மறுபக்கம் கமல்ஹாசன் இன்னும் இரண்டு ஸ்க்ரிப்டுகளை எழுதி முடித்துவிட்டாராம். அதில் ஒன்றுதான் தேவர் மகன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் என்கிறார்கள். 

தேவர்மகன் 2 படம்தான் என்றாலும் இந்த படத்தின் தலைப்பு வேறாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தலைவன் இருக்கிறான் எனும் பெயரில் ஒரு படத்தின் கதை தயாராக இருந்ததாக தகவல் வெளியான நிலையில், அந்த படம்தான் இதுவா என பலரும் பேசி வருகின்றனர். 

தேவர் மகன் படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் நடித்திருப்பார்கள். அந்த வகையில் கதை சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். அதையே ஃபாலோ செய்து கமலின் மகனாக முன்னணி நடிகர் ஒருவரும், நாசர் மகனான இன்னொரு நடிகரும் நடிக்கும் வகையில் ஸ்க்ரிப்ட் எழுதப்பட்டுள்ளதாம். 

கமலுக்கு மகனாக நடிக்க முதலில் சூர்யாவைத் தேர்ந்தெடுத்தார்களாம். அதன் பின்னர் விக்ரமையும் மனதில் வைத்துள்ளார்களாம். சூர்யா அல்லது விக்ரம் இருவரில் ஒருவர்தான் படத்தில் நடிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விக்ரம் 3ல் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருப்பதால், இந்த படத்தில் விக்ரம் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. 

நாசரின் மகனாக விஜய் சேதுபதி அல்லது பஹத் பாசில் இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை விஸ்வரூபம் 1, 2 படத்தில் எடிட்டராக பணியாற்றிய பிரபல மலையாள பட இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார். முன்னதாக கமல் அடுத்த படத்தில் சூர்யாவுக்கு முழு அன்பையும் காட்டிவிடலாம் என கூறியிருந்தார். அது ஒருவேளை விக்ரம் 3 படத்தைப் பற்றி கூறுகிறாரோ என அப்போது பேசப்பட்டது. 

இந்நிலையில் தற்போது அது இந்த படமாகவும் இருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. அவர் இல்லாத பட்சத்தில் விக்ரமிடம் போகலாம் என்பது போல திட்டமாம். இப்படி இருவரிடமும் கேட்டு அவர்களுக்கும் கால்ஷீட் பிரச்னை இருக்கும்பட்சத்தில் படத்தை தள்ளிப் போடலாம் அல்லது வேறு நடிகர்கள் யாரையாவது தேடலாம் என பேசப்படுகிறது. 

ஆனால் விக்ரம், சூர்யா இருவருமே மிகவும் பிஸியாக இருக்கிறார்கள்.  இந்த படத்தின் ஷூட்டிங் இரண்டொரு மாதத்தில் துவங்கவும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஜூலை முதல் வாரத்தில் இதுகுறித்த அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்