லைகாவுடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் பணிபுரியவுள்ள ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படத்தைப் பற்றிய அறிவிப்பை நாளை வெளியிடவுள்ளது லைகா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆறு வயது முதல் அறுபது வயது வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரம் கொண்டவர். அவரின் கரீஸ்மாவுக்கே திரைப்படங்கள் ஓடிவிடுகின்றன. இந்த வயதிலும் ஓயாமல் உழைக்கிறார். தற்போது நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் லைகா தயாரிப்பில் நடிக்கவுள்ளார் ரஜினி. முதல் படத்தை டான் திரைப்பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதுகுறித்த அறிவிப்புதான் நாளை வெளியாகவுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், லைகா நாளை காலை 10.30 மணிக்கு ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளது. லைகா புரடொக்ஷன்ஸ் டிவிட்டர் தளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய பிரபலங்களுடன் லைகா நிறுவன தலைவர் சந்திக்கும் நிகழ்ச்சி நாளை சென்னையில் பெரிய ஹோட்டல் ஒன்றில் நடைபெறுகிறது. அதில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் நம்பப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…