கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீப காலத்தில் வந்த 5 படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து பெரும் அதிருப்தியை அளித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் மீது கவலையில் இருக்கிறார்கள். தனது படங்கள் பெரிய அளவில் புகழ் பெற்றாலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டால் மட்டுமே அந்தந்த நடிகர்களுக்கு அது நல்ல பெயரைப் பெற்றுத்தரும். மேலும் திருப்தியாகவும் இருக்கும்.
ஏ.எல். விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். பின்னர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ என அடுத்தடுத்த படங்களில் நடித்து பாப்புலர் ஆனார். பின்னர் தனுஷ், விஜய், சூர்யாவுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றார். இந்த படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பாராட்டப்பட்டது. ஆனாலும் படம் பிளாப் ஆனதால் கடும் அப்செட் ஆனார் கீர்த்தி சுரேஷ்.
பின்னர் மகாநடி, நடிகையர் திலகம் படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தன் திறமையை நிரூபித்தார். பாகுபலி, கேஜிஎப் மாதிரி பான் இந்தியா படமாக வெற்றியைக் குவித்தது இந்த படம். இந்த படத்தில் தனது திறமையை நிரூபித்த கீர்த்திக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இனி பெரிய கதாநாயகர்களுடன் நடிப்பதை கொஞ்சம் தவிர்த்துவிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்தார் கீர்த்தி சுரேஷ்.
பெண்குயின், மிஸ் இந்தியா, குட்லக் சகி, சாணி காயிதம் என வரிசையாக அனைத்து படங்களும் ஊத்திக் கொண்டது. இதனால் மீண்டும் அப்செட் ஆனவரை தெலுங்கு திரையுலகம் அன்புடன் அழைத்து கவர்ச்சிக்கு தூண்டவே, அங்கு பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக கவர்ச்சி தாண்டவமாடிக்கொண்டிருக்கிறார் கீர்த்தி.
இந்நிலையில் அவரின் சொந்த படமான வாஸி கூட அவரை ஏமாற்றிவிட்டது. டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்தும் படம் மண்ணைக் கவ்வியுள்ளது மிகுந்த வருத்தமான செய்திதான்.
தமிழில் இப்போதைக்கு உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மாமன்னன் படம் மட்டுமே கைவசம் உள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்து இவரது தமிழ் படங்கள் குறித்து பேசமுடியும் எனும் அளவுக்கு ஆகிவிட்டது நிலைமை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…