சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தின் கதை, ஒரு மாயாஜால கதை என்பது இப்போது தெரியவந்துள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னரே படத்தின் கதை வெளியானதால் சிவகார்த்திகேயன் மனவருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பிரின்ஸ் படத்தின் படுதோல்விக்கு பிறகு நிச்சயமாக நல்ல படம் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த முறை மண்டேலா பட இயக்குநர் என்பதால் நிச்சயம் நல்ல படம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக கதையில் சிவகார்த்திகேயன் தலையீடு இருப்பதாக வந்த தகவல் அமைந்துவிட்டது.
ஏற்கனவே சீமராஜா, டான், பிரின்ஸ் படங்களில் சிவகார்த்திகேயன் தலையிட்டு கதையை மாற்றியதாக குற்றச்சாட்டு உண்டு. இயக்குநர்களின் பாதையிலேயே பயணிக்க விட்டால் மட்டுமே அவர் தனது திறமையைக் காண்பிக்க முடியும். இப்படி செய்தால் எப்படி என அவரது ரசிகர்களே கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், மாவீரன் படத்தின் கதை லீக்காகியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஒரு வரைபட கலைஞராக இருக்கிறார். அதன்படி அவர் வரைவது எல்லாமே நிகழ் வாழ்க்கையில் அப்படியே நடக்கிறதாம். இதன்படி சில ஜாலியான விசயங்களை செய்ய அவருக்கு தலைவலியாக வந்து போகிறது ஒரு சமூக சேவை. இப்படி சமூக சேவை ஒன்றை செய்ய போய், அதனால் அவருக்கும் அவரைச் சுற்றி உள்ளவர்களுக்கு மிகப்பெரிய பிரச்னை ஏற்படுகிறதாம். இதிலிருந்து தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காக்க, அவரே மாவீரன் ஒருவனை ஸ்கெட்ச் செய்து வரவழைக்கிறார். ஆனால் வந்தவரோ சிவகார்த்திகேயனுக்கு ஒவ்வொருவரும் மாவீரனே என அட்வைஸ் செய்வதாகவும், இதிலிருந்து தன்னம்பிக்கை பெற்று எதிரிகளை துவம்சம் செய்கிறார் சிவகார்த்திகேயன். இதுதான் படத்தின் கதையாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…