Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இவர் மட்டும் கலந்து கொள்ளக் கூடாது! மணிரத்னம் போட்ட கோடு...!

UDHAYAKUMAR September 08, 2022 & 09:00 [IST]
இவர் மட்டும் கலந்து கொள்ளக் கூடாது! மணிரத்னம் போட்ட கோடு...!Representative Image.

பொன்னியின் செல்வன் விழாவுக்கு குறிப்பிட்ட ஒரு பிரபலத்தை அழைக்க லைகா முயற்சி செய்த போது மணிரத்னம் அதற்கு தடை போட்டார் என்கிற செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் லைகா அந்த பிரபலத்துக்கு அழைப்பு விடுக்காமல் விட்டதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் இயக்குநர் மட்டுமல்ல, அந்த படத்தை பகுதியளவு தயாரிப்பதும் மணிரத்னம்தான். இதனால் லைகா நிறுவனம் அவரை அட்ஜஸ்ட் செய்துகொண்டுதான் போகும். முன்னதாக ரெட் ஜெயண்ட் மூவிஸிடம் படத்தைக் கொடுப்பது என லைகா முடிவு செய்திருந்ததாம். ஆனால் இதை மணிரத்னம் மறுத்து நீங்களே ரிலீஸ் செய்ய வேண்டும் என கூற, சில நாள் யோசித்துவிட்டு அவர்களே ரிலீஸ் செய்வது குறித்து ஆலோசித்தார்களாம். 

பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கோலாகலமாக ரஜினி, கமல் இருவர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பிரபல தயாரிப்பாளரும் சினிமா பைனான்சியருமான அன்புச் செழியனுக்கு அழைப்பு விடுக்கப்பட ஆலோசிக்கப்பட்டதாம். லைகா நிறுவனம் அவரிடம்தான் கடன் பெற்று படத்தை எடுத்திருக்கிறார்கள். 

ஆனால் மணிரத்னம் அன்புச் செழியன் வரவை சம்மதிக்கவே இல்லையாம். முன்னதாக கடன் பிரச்னையால் தனது அண்ணன் ஜிவி இறப்புக்கும் குறிப்பிட்ட நபருக்கும் சம்பந்தம் இருப்பதாக மணிரத்னம் நினைப்பதால்தான் அவரை அழைக்கவில்லை என கோலிவுட்டில் பேசுகிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்