Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

42 வருடங்களாக சுற்றி வரும் பொன்னியின் செல்வனும் மணிரத்னமும்...!

UDHAYAKUMAR September 08, 2022 & 09:30 [IST]
42 வருடங்களாக சுற்றி வரும் பொன்னியின் செல்வனும் மணிரத்னமும்...!Representative Image.

பொன்னியின் செல்வன் கதை உரிமையை முதலில் எம்ஜிஆர் தான் வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின் அவரிடமிருந்து நடிகர், தயாரிப்பாளர் கமல்ஹாசன் பெற்றதாகவும், மணிரத்னத்தை வைத்து இந்த படத்தை எடுக்க முயற்சித்ததாகவும் அவரே கூறியிருந்தார். எது எப்படியோ ஆரம்பித்த நாளிலிருந்து பொன்னியின் செல்வனை மணிரத்னம்தான் எடுக்க வேண்டும் தனது படம் இது என மார்தட்டிக் கொள்ள அவருக்கு முழு உரிமை உண்டு. 

பொன்னியின் செல்வன் ஆரம்ப காலத்திலேயே எடுக்கப்பட்டிருந்தாலும் பல காட்சிகளில் தத்ரூபமாக நம்பும்படியாக எடுக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. இப்போது தொழில்நுட்பத்தின் உதவியால் எப்படிப்பட்ட காட்சிகளையும் எளிதாக எடுத்துவிடலாம். இது மணிரத்னம் 42 ஆண்டுகள் காத்திருந்தாலும் அவருக்கு உதவியாக இருந்திருக்கும். 

2000, 2010, 2020 என இத்தனை ஆண்டு கால தாமதத்துக்குப் பிறகும் பொன்னியின் செல்வனின் கதை கேட்க, பார்க்க மக்கள் ஆர்வமாக இருப்பதற்கு காரணம் மணிரத்னம் எனும் மேஜிக். வரும் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்