தனக்கு வந்த தமிழ் பட வாய்ப்பில் பின் ஐஸ்வர்யா ராய் நடித்தார் என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். தன்னிடம் வந்த வாய்ப்புதான் அது எனவும் ஆனால் நடிக்கமுடியாமல் போய்விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மஞ்சு வாரியர் நடிப்பில் துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனுடன் தற்போது அவர் நடித்துள்ள மலையாளப் படமும் வெளியாகியிருக்கிறது.
மஞ்சு வாரியர் நடிப்பில் ஆயிஷா எனும் மலையாளப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கான புரமோசன் நிகழ்ச்சியில் மஞ்சுவாரியர் பல விசயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அசுரன் படத்துக்கு முன்பே தமிழில் தனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. அப்போது மலையாளத்தில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன். அதனால் சரியாக என் தேதிகளைக் கையாள முடியவில்லை. மலையாள படங்களுக்கே அனைத்தையும் கொடுக்கவேண்டியதாயிற்று.
சில படங்கள் இடையில் ஏற்பட்ட பிரச்னைகளால் தொடங்காமலே போய்விட்டது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மஞ்சு வாரியர்தான் நடிக்க வேண்டியதாம். ஆனால் சில காரணங்களுக்காக அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்துக்குதான் பின்னாளில் ஐஸ்வர்யா ராயைத் தேர்ந்தெடுத்துள்ளார் ராஜீவ் மேனன்.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித், அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு ஆகியோர் நடித்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். அஜித் ஜோடியாக தபுவும், மம்மூட்டி ஜோடியாக ஐஸ்வர்யா ராயும் நடித்திருப்பார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…