Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெந்து தணிந்த காடு ஆக மாறிய நதிகளிலே நீராடும் சூரியன்? - என்ன நடந்தது?

UDHAYA KUMAR September 15, 2022 & 19:00 [IST]
 வெந்து தணிந்த காடு ஆக மாறிய நதிகளிலே நீராடும் சூரியன்? - என்ன நடந்தது?Representative Image.

வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று செப்டம்பர் 15ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  கௌதம் மேனன் - சிம்பு - ஏ ஆர் ரஹ்மான் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தின் கதை, திரைக்கதை, இசை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்துக்கு முன்பாக கௌதம் மேனனுடன் சிம்பு இணைவதாக இருந்த நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படம் பற்றி ரசிகர்கள் பேசி வருகிறார்கள். 

நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் பெயரை மட்டும் மாற்றியிருக்கிறார்களா அல்லது இது வேறு கதையா?  நதிகளிலே நீராடும் சூரியன் படம் மீண்டும் வருமா? முன்னதாக கூறப்பட்ட விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வருமா இப்படி ஏகப்பட்ட கேள்விகள் இணையதளங்களில் கேட்கப்பட்டு வருகின்றன. 

கொரோனா வைரஸ் உச்சக்கட்டத்தில் இருந்த சமயத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. பரவலாக பேச்சு அடிபட்ட நிலையில்,  கார்த்திக் டயல் செய்த எண் என குறும்படம் ஒன்றை வெளியிட்டார் கௌதம் மேனன்.  

இதனைத் தொடர்ந்து நதிகளிலே நீராடும் சூரியன் படத்தை இயக்கவுள்ளதாகவும் அதில் கௌதம் மேனன், சிம்பு இணையவுள்ளதாகவும் பேச்சு எழுந்தது. ஆனால் அப்போதும் இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. 

அசுரன் மாதிரியான ஒரு ராவான கதையில் நடிக்க சிம்பு ஆசைப்பட்டதாகவும் அதனால் கதையை மாற்றி வெந்து தணிந்தது காடு படத்தை எடுக்க கௌதம் தயாரானதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் ஜெயமோகனின் அக்கினி குஞ்சொன்று கண்டேன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்