Pandian Stores Today Episode: ஒரு கூட்டு குடும்பம் சந்தோசமா இருக்கும் போது, தேவையில்லாம வெளிய இருந்து வரும் ஆளுங்களால தான் நாசமா போகும் என்பதை மிக அழகாக காண்பிச்சிருக்காங்க இந்த சீரியல்ல. அதே போல மூர்த்தி வீட்ல எல்லாருக்கும் விருப்பம் இல்லைன்னா வேற வழி இல்லாம மீனா அப்பா கிட்ட வீட்டை வித்துறாங்க. இப்ப அதுவே அவங்களுக்கு வினையா வந்து முடிஞ்சிருக்கு.
ஒரு வழியா கதிரும் முல்லையும் அவங்க குடும்பத்தோட ஒன்னு சேந்தாங்க. அது பொறுக்கல, இந்த கண்ணன் பையன் வம்புக்கு மீனா அப்பாக்கு போன் பண்ணி வீட்டுக்கு வர சொல்லி, அவரு வந்து இல்லாதது பொல்லாததையும் சொல்லி பெரிய பிரச்சனை வந்துடுச்சு. கடைசில இப்ப இது என்னோட வீடு ஒழுங்கா மரியாதையா வீட்ட காலி பண்ணுங்கன்னு சொல்லி மீனா அப்பா அவங்கள அவமானப்படுத்துறாரு.
மீனா இது என்னோட வீடு, அப்ப இங்க இருக்குறவங்க எல்லாத்துக்கும் இது தான் வீடு நாங்க எங்கையும் போக முடியாதுன்னு சொல்றா. ஆனா மீனா அப்பா இது ஒன்னும் உன் புருஷன் காசு குடுத்து வாங்கல, என்னோட காசு எல்லாம்னு சொல்றாரு. அப்புறம் எல்லாரும் பேசி பேசி பிரச்சனை பெருசாகி கடைசில எல்லாரும் வீட்டை விட்டு வெளிய வந்துட்டாங்க. கதிர் இவங்க எல்லாத்தையும் அவங்க தங்கி இருந்த வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க. இந்த வாரம் எல்லாரும் அதை பத்தி அழுது அழுதே போகுமான்னு பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…