மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதற்கான அறிவிப்பை படநிறுவனமே வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
வரும் மார்ச் 31ம் தேதி முதல் பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான புரோமோசன் நிகழ்வுகளைத் துவக்க இருக்கிறதாம் படக்குழு. இதற்கு முன்னதாகவே மார்ச் 2வது வாரத்திலிருந்தே பாடல்களை ஒவ்வொன்றாக வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறார்களாம். மார்ச் மாத இறுதியில் டீசர் ஒன்று வெளியாகுமாம். பின்னர் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகும் என கூறப்படுகிறது.
கப்பல் விபத்தில் அருள்மொழி வர்மன் கடலில் சென்றுவிட்டார் என அனைவருக்கும் தகவல் வர, சோழ குலமே பரிதவித்துப் போகின்றது. தூது சென்ற வந்தியத்தேவன் தப்பித்துவிடுகிறான். அருள்மொழி வர்மனைக் காக்க கடலுக்குள் குதிக்கிறாள் ஊமைராணி. இதன்மூலம் மக்களுக்கு புரிகிறது அருள்மொழி வர்மன் காப்பாற்றப்பட்டு விடுவார் என்பது. ஆனால் பரிதவிப்பில் இருக்கும் சோழர்களிடம் அருள்மொழி வர்மன் உயிரோடு இருப்பதை யார் சொல்வது? வந்தியத் தேவனுக்கு என்ன ஆனது? சோழ நாட்டைக் காப்பாற்ற அருள்மொழியை அழைத்து வருகிறானா ? தம்பிக்கு ஆபத்து நேர்ந்த நிலையில் கொதித்தெழுந்து வந்த ஆதித்த கரிகாலன் அடுத்து என்ன செய்யப்போகிறார்? நந்தினியின் திட்டம் நிறைவேறியதா என அனைத்து கேள்விகளுக்கும் இந்த பாகத்தில் விடை கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…