தமிழ் மொழியில் உருவான நாவல்களில் இதுவரை அதிகம் பேர் உச்சரித்த வார்த்தை பொன்னியின் செல்வன்தான். கல்கி எழுதிய இந்த நாவலில் வரும் கதை பெரும்பகுதி உண்மையும், சில கற்பனையும் கலந்து எழுதப்பட்டது.
இதன்படி, இந்த கதையை எழுத்தாக படிப்பவர்களுக்கு 1000 வருட சோழ வரலாறு கண்முன்னே நிகழ்த்திக் காட்டும் வகையில் இருக்கும். இதனை தமிழில் படமாக எடுக்கும்போது அதன் பொருட்செலவு எவ்வளவு இருந்திருக்கும்?
மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இதன் ஒரு பகுதி வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது. எம்ஜிஆரின் கனவான இந்த படம் பின்னாளில் கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டு, பின் அவரது நடிப்பில் மணிரத்னம் இயக்குவார் என பேசப்பட்டது.
இதனிடையே காலங்கள் உருண்டோடி விஜய், மகேஷ்பாபு இந்த படத்தில் நடிப்பதாக பேசப்பட்டது. பின்னர்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் 600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அக்ஷய் குமார், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படு மோசமான வசூலை பெற்று தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய 2.0 படத்துக்கு போட்ட பணத்தை இந்த படத்துக்கு போட்டிருக்கலாம் என சில ரஜினி ரசிகர்களே பேசி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…